புதுச்சேரி-திட்டம் மற்றும் சுற்றுலா உதவியாளர் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
புதுச்சேரி அரசின் திட்டம் மற்றும் ஆராய்ச்சி துறையில் 4 திட்ட உதவியாளர், 5 புலனாய்வாளர் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளது.
இதற்கு புதுச்சேரியை பூர்வீகமாக கொண்டவர்கள் மற்றும் வசிப்போரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
வரும் டிச. 22ம் தேதி மாலை 5.45 மணி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என துறையின் இணை இயக்குனர் அருள்மொழி தெரிவித்துள்ளார்.
சுற்றுலா துறை
இதுபோல புதுச்சேரி சுற்றுலா துறையில் 5 உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் இன்று 24ம் தேதி முதல் வரும் டிச. 23ம் தேதி மாலை 5.45 மணி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
இட ஒதுக்கீடு, கல்வி தகுதி, வயது தளர்வு உள்ளிட்ட விபரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது என துறை இயக்குனர் பிரியதர்ஷினி தெரிவித்துள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement