சவுதி அரேபியாவில் போதைப்பொருள்கள் தொடர்பான குற்றங்களுக்காக சமீபத்தில் மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்டது. அங்கு 10 நாள்களில் 12 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. அதில் சிலருக்கு வாளால் தலைத் துண்டிக்கப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டிருக்கிறது. மரண தண்டனை நிறைவேற்றப்பட்டவர்களில் பலர் வெளிநாட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
போதைப்பொருள்கள் சம்பந்தப்பட்ட குற்றங்களுக்காக மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட 12 பேரில் 3 பேர் பாகிஸ்தான், 4 பேர் சிரியாவைச் சேர்ந்தவர்கள்… 2 பேர் ஜோர்தானியர்கள் மற்ற மூவர் சவுதி அரேபியாவைச் சேர்ந்தவர்கள்.
முன்னதாக இந்த ஆண்டின் மார்ச் மாதத்தில் சவுதி அரேபியாவில் கிரிமினல் குற்றங்கள், கொலைகள் மற்றும் போராட்ட குழுக்களைச் சார்ந்த 81 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. தற்போதைய வரலாற்றில் இதுதான் சவுதி அரேபியாவில் நிறைவேற்றப்பட்ட வெகுஜென மரண தண்டனை என்கிறார்கள்.