நெல்லை மாவட்டத்தில் சாதிய வன்மம் காரணமாக அடுத்தடுத்து நடக்கும் கொலை சம்பவங்களால் மக்கள் அச்சம் அடைந்திருக்கிறார்கள். இந்த நிலையில், மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த இளைஞரை காதலித்ததால், பெற்ற மகளை தாயே கொலைசெய்த கொடூரம் நடந்துள்ளது.
நெல்லையை அடுத்த கீழப்பாலாமடை கிராமத்தைச் சேர்ந்தவர், பேச்சி. சென்னையில் கார் ஓட்டுநராக வேலை செய்து வருகிறார். இவர் மனைவி ஆறுமுக கனி, சொந்த ஊரில் வசிக்கிறார். மகள் அருணா, கோவையில் தனியார் நர்ஸிங் கல்லூரியில் படித்து வந்தார். படிக்கும்போது அங்குள்ள மாற்று சமூகத்தைச் சேர்ந்தவருடன் அருணாவுக்கு பழக்கம் ஏற்பட்டிருக்கிறது.