odc_rain_news_photo_12_11_2022_1211chn_76_2

கோப்புப்படம்

அடுத்த 2 நேரத்திற்குள்ளாக(மாலை 6 மணி வரை) காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், திருவள்ளூர், திருத்தணி கும்மிடிப்பூண்டி,வாலாஜாபாத் பகுதிகளில் லேசான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்து, காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாறியதையடுத்து திருவள்ளூவர் மாவட்டத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாளை முதல் 4 நாள்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

இதையும் படிக்க: சபரிமலை: 6 நாள்களில் 2.61 லட்சம் பக்தர்கள் தரிசனம்!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *