புதுடில்லி: 4 முக்கிய விவகாரங்களை விசாரிக்க 4 சிறப்பு அமர்வுகளை அமைக்க உச்சநீதிமன்றம் முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக தலைமை நீதிபதி சந்திரசூட் கூறுகையில், அடுத்த வாரம் 4 சிறப்பு அமர்வுகள் அமைக்கப்படும். இந்த அமர்வுகள் கிரிமினல் விவகாரங்கள், நேரடி மற்றும் மறைமுக வரி விவகாரங்கள், நிலம் கையகப்படுத்தும் விவகாரம் மற்றும் மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயம் குறித்து விசாரிக்கும் எனக்கூறினார்.
சில நாட்களுக்கு முன், ஒவ்வொரு அமர்வும் 10 ஜாமின் வழக்குகளை விசாரிக்க வேண்டும் என சந்திரசூட் அறிவுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement