புதுடில்லி : புதிய பார்லிமென்ட் கட்டுமானப் பணிகள் தாமதமாவதால், குளிர்கால கூட்டத் தொடர் பழைய கட்டடத்திலேயே நடக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.

புதுடில்லியில் தற்போதுள்ள பார்லிமென்ட் கட்டடம், பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது. இது பழையதாகி விட்டதாலும், போதிய இட வசதி இல்லாததாலும், புதிய பார்லிமென்ட் வளாகம் கட்டும் பணி வேகமாக நடந்து வருகிறது.

இந்த பணிகள் முடிவடைந்து, இந்தாண்டு குளிர்கால கூட்டத் தொடர் பார்லிமென்ட் புதிய கட்டடத்தில் நடக்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், மத்திய அரசின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:புதிய பார்லிமென்ட் வளாகத்தில் கட்டுமானப் பணிகள் முடிவடைந்து விட்டன. ஆனாலும், எலெக்ட்ரிக், வெளிப்பூச்சு, உள் அலங்காரம், நற்காலிகள், தரைவிரிப்புகள் அமைக்கும் பணிகள் முடியவில்லை.

latest tamil news

இதனால், நவம்பர் மூன்றாவது வாரத்தில் துவங்கவுள்ள பார்லிமென்ட் குளிர்கால கூட்டத் தொடர், புதிய கட்டடத்தில் நடக்க வாய்ப்பில்லை; வழக்கம் போல் பழைய கட்டடத்திலேயே நடக்கும். இன்னும் ஒரு சில மாதங்களில் அனைத்து பணிகளும் முடிந்து விடும்.
இவ்வாறு அவர் கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *