இதையடுத்து விடியோ விவகாரம் தொடர்பாக ஒட்டல் நிர்வாகம் கோலியுடன் மன்னிப்பு கோரியதுடன், சம்மந்தப்பட்ட ஊழியரை பணி நீக்கமும் செய்துள்ளது. இதுதொடர்பாக ஒட்டல் நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “எங்கள் ஒட்டலுக்கு வரும் விருந்தினர்கள் பாதுகாப்பு மற்றும் தனியுரிமைக்கு முன்னுரிமை தருவதே முதன்மையாக கருதுகிறோம். இந்த சம்பவத்தால் ஏமாற்றம் அடைந்துள்ளோம். இந்த விவகாரத்தில் விருந்தினரிடம் நாங்கள் நிபந்தனையின்றி மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்.