இந்த பிட்புல் ரக நாய்கள் செல்ல பிராணிகளாக வளர்க்கப்படுகின்றன. சில நேரங்களில் இது வெளி ஆட்களைத் தாக்குவது மட்டுமல்லாமல், தங்களை வளர்த்து வரும் எஜமானர்களையும் தாக்கக் கூடியவை ஆகும். இது போன்ற பல சம்பவங்களைக் கருத்தில் கொண்டு சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, போர்ச்சுக்கல், பிரான்ஸ், ஜெர்மனி, பிரிட்டன் போன்ற நாடுகளில் இந்த பிட்புல் நாயை வளர்க்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.