ஹோ சி மின்: வியட்நாம் ஓபன் பாட்மின்டன் கலப்பு இரட்டையர் பிரிவு அரையிறுதிக்கு இந்தியாவின் சிக்கி ரெட்டி, ரோஹன் கபூர் ஜோடி முன்னேறியது.

வியட்நாமில், சர்வதேச பாட்மின்டன் தொடர் நடக்கிறது. இதன் கலப்பு இரட்டையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் சிக்கி ரெட்டி, ரோஹன் கபூர் ஜோடி, மலேசியாவின் பெங் சூன் சான், யீ சீ சியா ஜோடியை எதிர்கொண்டது. முதல் செட்டை 21–19 எனக் கைப்பற்றிய இந்திய ஜோடி, இரண்டாவது செட்டை 21–17 என வென்றது.

 

மொத்தம் 39 நிமிடம் நீடித்த போட்டியில் அசத்திய சிக்கி ரெட்டி, ரோஹன் கபூர் ஜோடி 21–19, 21–17 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தது. இதில் இந்திய ஜோடி, இந்தோனேஷியாவின் ரெஹான் குஷர்ஜந்தோ, லிசா ஆயு கசுமாவதி ஜோடியை சந்திக்கிறது.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *