Loading

அப்பொழுதுதான் நாம் தர்ம வழியில் நல்ல முடிவை எடுக்க முடியும். அதற்கு அந்த அம்மனே வழியைக் காட்டுவாள். கடவுள் நல்லவர்களைத் தான் சோதிப்பார் என்று சொல்லுவோம். ஏன் சோதிக்கிறார் என்றால் நமக்கு ஒரு ஆபத்து என்று வருகையில் அவருடையத் திருப்பாதங்களை வணங்கி தர்ம வழியில் நடக்கிறோமா இல்லையா என்று பார்க்கத்தான். அதனால் எந்தச் சூழ்நிலையிலும், சக்தியை நம் மனதில் வைத்து சுலோகம் சொல்லி ஆராதிக்க வேண்டும். அப்படி செய்தால் நமக்குக் கவலை என்பதே இல்லை. அம்பாளுடைய கருணைக்கு கீழ் வந்து விடுவோம். ஜகன்மாதா நம்மைக் காத்திடுவாள் என்ற நம்பிக்கையும் பிறக்கும்.

துர்காதேவி

துர்காதேவி

இந்த நவராத்திரி பண்டிகையின் ஆறாவது நாளில் அம்பாள் ஆறு வயது குழந்தையாக நமக்கு அருள்கிறாள். ஆறாவது நாள் அம்மன் சண்டிகா என்ற நாமத்துடன் அழைக்கப்படுகிறாள். இன்றைக்கான ஸ்லோகம்…

“சண்டிகாம் சண்டரூபாம் ச

சண்டமுண்ட விநாசினிம்

தாம் சண்டபாபஹரிணிம்

சண்டிகாம் பூஜையாம்யஹம்”

பொருள்: எந்த தேவி உக்ர ரூபமுடைவளாகவும் ராட்சஷர்களையும் அழிக்கும் சக்தி உடையவாளாகவும் இருக்கிறாளோ அந்த சண்டிகா தேவியை நான் பூஜிக்கிறேன்.

இந்த நாளில் அம்மன் காத்யாயனி என்ற பெயரும் பெற்று விளங்குகிறாள்.

“பஷ்டம் காத்யாயனி”

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *