டெல் அவிவ்: ஏ.டி.பி., டென்னிஸ் தொடரின் அரையிறுதிக்கு இந்தியாவின் போபண்ணா, நெதர்லாந்தின் மிடில்கூப் ஜோடி முன்னேறியது.
இஸ்ரேலில் ஆண்களுக்கான ஏ.டி.பி., டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, நெதர்லாந்தின் மாட்வே மிடில்கூப் ஜோடி, செர்பியாவின் மெட்ஜெடோவிச், இஸ்ரேலின் இஷாய் ஓலியல் ஜோடியை சந்தித்தது. இதில் போபண்ணா ஜோடி 4–6, 7–6, 10–6 என போராடி வென்று காலிறுதிக்கு முன்னேறியது.
இதில் குரோஷியாவின் பிரான்கோ சுகோர், உக்ரைனின் டெனிஸ் மோல்சனோவ் ஜோடியை எதிர்கொண்டது. முதல் செட்டை போபண்ணா ஜோடி 4–6 என இழந்தது. இரண்டாவது செட் ‘டை பிரேக்கர்’ வரை நீண்டது. இதை போபண்ணா ஜோடி 7–6 என கைப்பற்றியது. வெற்றியாளரை முடிவு செய்ய நடந்த ‘சூப்பர் டைபிரேக்கரில்’ போபண்ணா ஜோடி 10–6 என அசத்தியது. ஒரு மணி நேரம், 40 நிமிடம் நீடித்த போட்டியின் முடிவில் போபண்ணா ஜோடி 4–6, 7–6, 10–6 என்ற கணக்கில் வெற்றி பெற்று, அரையிறுதிக்குள் நுழைந்தது.
Advertisement