பூமியை ஏதேனும் ஒரு விண்கல் தாக்க வந்தால் அதை எப்பிடி விண்கலம் கொண்டு திசை திருப்புவது என்ற முயற்சியில் நாசா வெற்றி கண்டிருக்கிறது.

கியூபாவில் 1975-ல் பிறப்பிக்கப்பட்ட குடும்பச் சட்டம் பொது வாக்கெடுப்பின் மூலம் திருத்தும் செய்யப்பட்டிருக்கிறது. இதன் மூலம் அந்த நாட்டில் ஒரே பாலின திருமணம், வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளுதல் உள்ளிட்டவற்றை அரசு அங்கீகரித்திருக்கிறது.

உக்ரைன்-ரஷ்யப் போரில் வாஷிங்டன் (அமெரிக்கா) -மாஸ்கோ (ரஷ்யா) உறவில் சிக்கல் ஏற்பட்டிருப்பதால், ரஷ்யா ஆஸ்கர் 2023-க்கு தங்கள் நாட்டு திரைப்படங்களை அனுப்பப் போவதில்லை என முடிவு செய்திருக்கிறது.

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல இயக்குநரும், நடிகருமான ராபர்ட் டவுனி பற்றிய ஆவணப்படம் விரைவில் நெட்ஃப்லிக்ஸில் வெளியாகவிருக்கிறது.

செப்டம்பர் 26-ம் தேதி தொடங்கிய பாரிஸ் ஃபேஷன் வீக் அடுத்த மாதம் 4-ம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. இந்த பிரமாண்ட நிகழ்ச்சியில் 107 பிராண்டுகளுக்கு மேல் பங்கேற்கின்றன.

கொரிய ஓப்பனில் பிரிட்டனின் டான் ஈவான்ஸை வீழ்த்தினார் யொஷிட்டோ நிஷியோக்கா!

இறுக்கமான உடையால் படிக்கட்டுகளில் நடக்க முடியாமல் திணறிய கிம் கர்டாஷியன்!

உகாண்டாவில் வேகமெடுக்கும் எபோலா… பலி எண்ணிக்கை 28-ஆக உயர்வு!

தென் கொரியாவில் தற்கொலைச் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. அண்மையில் வெளியான அறிக்கை ஒன்றின்படி, உலகளவில் தற்கொலைகள் அதிகம் நிகழ்வது தென் கொரியாவில் தானாம். கடந்த ஓராண்டில் 13,300 பேர் இதுவரை தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *