Loading

2024 மக்களவைத் தேர்தலுக்காக எதிர்க்கட்சிகள் வலுவான கூட்டணியை அமைக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி பூசல் நீடித்து வரும் நிலையில், 2024 மக்களவைத் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் சார்பில் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியை பிரதமர் வேட்பாளராக அறிவித்தால் எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் இணைய தயாராக இருக்கிறோம் என கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் தெரிவித்திருக்கிறார்.

பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் தரம்வீர் சவுத்ரி, “எதிர்க்கட்சிகளுடன் கூட்டணி வைப்பது தொடர்பான இறுதி முடிவை மாயாவதி தான் எடுப்பார். மாயாவதி நாடு முழுவதும் நன்கு அறியப்பட்ட அரசியல்வாதி. அவரை அறியாதவர்கள் இருக்க முடியாது.

அகிலேஷ் யாதவை விட மாயாவதி நன்கு அறியப்பட்ட தலைவர். உத்திரப்பிரதேசத்தில் நான்கு முறை முதல்வராக பதவி வகித்திருக்கிறார். அகிலேஷ் யாதவ் ஒரு முறை தான் முதல்வராக இருந்திருக்கிறார். மாயாவதி பரந்துபட்ட மனசு கொண்ட தலைவர். மாயாவதியை பிரதமர் வேட்பாளராக அகிலேஷ் ஏற்றுக் கொண்டால் அவரை மாலை அணிவி்த்து வரவேற்க தயாராக இருக்கிறோம்” என்றார்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *