டெல்லியில் 12 வயது சிறுவன் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தலைநகர் டெல்லியில் 12 வயது சிறுவன் ஒருவன் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அத்துடன் அந்த சிறுவனை இரும்பு தடிகளைக் கொண்டு கொடூரமாகத் தாக்கிவிட்டு அப்படியே ரோட்டில் விட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது.

image

இந்தச் சம்பவத்தைத் தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ள டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவர் ஸ்வாதி மாலிவால், “தலைநகர் டெல்லியில் பெண்கள் மட்டுமில்லாமல் ஆண் குழந்தைகளுக்குக் கூட பாதுகாப்பில்லை. 12 வயது சிறுவன் 4 பேரால் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு இரும்பு கம்பிகளால் தாக்கப்பட்டான். இந்தச் சம்பவம் குறித்து போலீசில் வழக்குப்பதிவு செய்துள்ளோம்” என்று கூறியுள்ளார்.

சிறுவனை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வருவதாகவும் இது தொடர்பாக மகளிர் ஆணையம் சார்பில் டெல்லி போலீசில் புகார் கொடுக்கப்பட்டு உள்ளதாகவும் ஸ்வாதி பாலிவால் தெரிவித்தார்.

image

இந்த வழக்கில் தொடர்புடைய ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் அனைவரும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என போலீசார் தெரிவித்து உள்ளனர்.

இதையும் படிக்க: திருமணத்தை மீறிய உறவால் இளைஞர் கொலை – கணவன் மனைவி உட்பட 3 பேர் கைது

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *