பாட்னா :”பிரதமராக வேண்டும் என்பதற்காக, ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ்ஆகிய கட்சியினருடன் கைகோர்த்து, நிதிஷ் குமார் பா.ஜ., முதுகில் குத்தி விட்டார்,” என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசினார். பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, புருனியா என்ற இடத்தில் நேற்று நடந்த பா.ஜ., பொதுக் கூட்டத்தில்மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாவது:ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ் குமார், பா.ஜ.,வுக்கு துரோகம் செய்துள்ளார். அவர் பிரதமர் கனவில் மிதக்கிறார்.

அதனால் தான் காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் ஆகிய கட்சிகளுடன் கைகோர்த்து, பா.ஜ., முதுகில் குத்தி விட்டார். ஆனால், அவர் நினைத்தது நடக்கப் போவது இல்லை. வரும் 2024ல் நடக்க உள்ள லோக்சபா தேர்தலில், பா.ஜ., மிகப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்கும். அதில் எந்த சந்தேகமும் வேண்டாம். அரசியல் என்பது, மக்களுக்கு சேவை செய்யும் ஒரு கருவி என நாங்கள் நம்புகிறோம்; அது, சுயநலனுக்கானது அல்ல. எப்போதும் பதவியில் இருக்க வேண்டும் என்பது மட்டுமே நிதிஷ் குமாரின் லட்சியம். இவ்வாறு அவர் பேசினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *