Loading

பல திட்டங்களுக்கு பல்லாயிரம் கோடி ரூபாய் நிதியைத் தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு கொடுத்திருக்கிறது. பா.ஜ.க கொள்கை அடிப்படையிலான கட்சி, அனைத்து மாநிலங்களிலும் தேசியக் கட்சியாக இருக்கிறது. மற்ற கட்சிகள் சுருங்கி மாநில கட்சிகளாக மாறிவிட்டன. தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் குடும்ப அரசியல் இருக்கிறது. தமிழ்நாட்டில் கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி என வரிசையாக வருகின்றனர். அந்தந்த மாநிலங்களில் குடும்ப அரசியலை எதிர்த்து பா.ஜ.க போராடிவருகிறது.

ஜே.பி.நட்டா மதுரை வந்தபோது

ஜே.பி.நட்டா மதுரை வந்தபோது

தமிழ் இலக்கியங்கள், பாரம்பர்யம், பண்பாட்டை பா.ஜ.க மதிக்கிறது. இதில் தி.மு.க-வுக்கு எந்தப் பங்களிப்பும் இல்லை. நீட் தேர்வால் கிராம மக்கள் எளிதில் மருத்துவப் படிப்பைப் பெறுகின்றனர். தேசிய கல்விக் கொள்கை பற்றி எதுவும் தெரியாமல் பேசுகின்றனர். இதில் மருத்துவப் படிப்பைக்கூட தமிழில் படிக்கலாம். குடும்ப அரசியல், ஊழல், கட்டப்பஞ்சாயத்து, மாநிலப் பிரிவினைவாதம் பேசும் தி.மு.க-வைப் புறக்கணிப்போம். விரைவில் தமிழ்நாட்டில் தாமரை மலரும்” என்றார்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *