ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள் அனைத்தும் அரசு மருத்துவ சங்கத்தின் கூட்டமைப்பின் சார்பில் ஐந்து அம்ச கோரிக்கை வலியுறுத்தி மருத்துவர்கள் அணைவரும் கோரிக்கை அட்டையை சட்டையில் குத்தியவாறு பணி செய்தனர். சுமார் 6 நாட்களாக தமிழக அரசுக்கு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது மேலும் தமிழக அரசுக்கு கவனம் ஈர்க்கும் விதமாக வருகின்ற 25ஆம் தேதி சென்னையில் தமிழக முழுவதும் உள்ள அரசு மருத்துவர்கள் சென்னை மருத்துவக் கல்லூரி வளாகத்தின் வெளியே கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் அன்று அனைத்து மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மருத்துவர்கள் கீர்த்தி, இளங்கோ, கோபிநாத், ஆகியோர் ஒருங்கிணைந்த மாவட்டத்தின் சார்பில் டாக்டர்கள் சென்னை ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வார்கள் என தெரிவித்தனர்.

- ஆர்.ஜே.சுரேஷ்குமார்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *