சிறுபான்மை மக்களை அச்சுறுத்தும் வகையில், பா.ஜ.க அரசால் என்.ஐ.ஏ, அமலாக்கத்துறை உள்ளிட்ட ஏஜென்சிகள் தவறாக பயன்படுத்தப்படுகிறன. அவர்களின் நோக்கம் என்பது ஒடுக்கப்பட்ட சமூக மக்களுக்கும் ஜனநாயகத்துக்கும் குரல் கொடுக்கும் அமைப்புகளையும், தலைவர்களையும் அச்சுறுத்துவது தான். ஆனால், எஸ்.டி.பி.ஐ. கட்சியை இத்தகைய அடக்குமுறைகளால் ஒடுக்க முடியாது” என்றார்.

செய்தியாளர் சந்திப்பின் போது எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில பொதுச் செயலாளர் அகமது நவவி, நெல்லை புறநகர் மாவட்ட தலைவர் சாகுல் ஹமீது உஸ்மானி, மாவட்ட துணைத் தலைவர்கள் எஸ்.எஸ்.கனி, ஹயாத் முகமது, மாவட்டச் செயலாளர் முஸ்தபா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.