வெள்ளி முதல் வியாழன் வரை (23.9.2022 – 29.9.2022) இந்த வாரம் எந்த ராசிக்கு என்ன பலன், உங்கள் ராசிக்கான பலனும் இந்த வாரம் செய்ய வேண்டிய பரிகாரமும் காணுங்கள்.

latest tamil news

மேஷம்

சூரியன், சுக்கிரன் நன்மையை வழங்குவார்கள். சூரிய வழிபாடு நன்மை தரும்.

அசுவினி: ஞாயிறு மதியம் வரை குடும்பத்தில் உண்டான பிரச்னைகளை சரி செய்வீர்கள். பிதுர் வழிபாட்டில் ஈடுபடுவீர்கள். அதன்பின் வருமானத்திற்குரிய செயல்களில் மேற்கொள்வீர்கள். பணியிடத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். புதிய சொத்து வாங்கும் முயற்சி பலிதமாகும்.

பரணி: அரசு வகையிலான செயல்களில் ஆதாயம் உண்டாகும். தொழில் சுமாராக செல்லும். திட்டமிட்ட பணிகள் நிறைவேறும். செலவிற்கேற்ற வருமானம் ஏற்படும். ஞாயிறு அன்று முன்னோர் வழிபாடு மேற்கொள்ளுதல் நன்மையாகும்.

கார்த்திகை 1ம் பாதம்: ஆறாமிடத்து சூரியனால் முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். வாரத்தின் முற்பகுதி சுமாராக சென்றாலும் பிற்பகுதியில் உங்கள் எண்ணங்கள் நிறைவேறும். ஞாயிறு அன்று முன்னோர் வழிபாடு நன்மையாகும். அரசு வழியில் ஆதாயம் அதிகரிக்கும். புதிய முயற்சிகளால் செலவுகள் அதிகரிக்கும் என்றாலும் சொத்து சேர்க்கை உண்டாகும்.

சந்திராஷ்டமம்

29.9.2022 நள்ளிரவு 12:48 மணி – 2.10.2022 நள்ளிரவு 3:59 மணி

ரிஷபம்

latest tamil news

புதன், சுக்கிரன், கேது, நன்மைகளை வழங்குவார்கள். முருகர் வழிபாடு முன்னேற்றம் தரும்.

கார்த்திகை 2, 3, 4: வாரத்தின் முதல் இரண்டு நாட்களில் உங்கள் முயற்சிகளில் கவனம் தேவை. செயல்கள் இழுபறியாகும். ஞாயிறு காலையில் பிதுர் வழிபாடு மேற்கொள்வீர்கள். மதியம் முதல் குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். புதிய சொத்துகள் வாங்கும் முயற்சி பலிதமாகும். புதன், வியாழனில் எதிர்பார்ப்பு நிறைவேறும்.

ரோகிணி: ஞாயிறு மதியம் வரை உங்கள் செயல்கள் இழுபறியாகும். பிதுர் வழிபாட்டால் நன்மை உண்டாகும். அதன்பின் நீண்ட நாள் எண்ணங்கள் நிறைவேறும். ஒரு சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். புதன் வியாழனில் பணியிடத்தில் இருந்த நெருக்கடிகள் விலகும். எதிர்பார்த்தவற்றில் நன்மையான பலன்கள் உண்டாகும்.

மிருகசீரிடம் 1, 2: ஆறாமிட கேதுவால் ஆற்றல் அதிகரிக்கும். ஞாயிறு மதியம் வரை மனக் குழப்பம் இருந்தாலும் அதன் பின் சரியாகும். பிதுர் வழிபாடு நன்மை தரும். திடமான சிந்தனையுடன் தைரியமாக செயல்பட்டு நினைத்ததை அடைவீர்கள். புதன், வியாழனில் எதிர்ப்புகள் விலகும். ஆதாயம் அதிகரிக்கும்.

மிதுனம்


ராகு, சுக்கிரன் முன்னேற்றத்தை வழங்குவார்கள். திருப்பதி ஏழுமலையானை வழிபட நன்மை அதிகரிக்கும்.

மிருகசீரிடம் 3, 4: ஞாயிறு காலையில் பித்ரு வழிபாடு மேற்கொள்வீர்கள். மதியம் வரை உங்கள் செயல்களில் சாதகமான நிலையை அடைவீர்கள். எதிர்பார்த்த உதவிகள் வந்து சேரும். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள். அதன்பின் முயற்சிகள் இழுபறியாகும். புதன் வியாழனில் குடும்பத்தினரின் தேவையை நிறைவேற்றுவீர்கள்.

திருவாதிரை: ஞாயிறு மதியம் வரை மூன்றாமிட சந்திரனும் லாபஸ்தான ராகுவும் உங்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவர். பித்ரு வழிபாடு நன்மையாகும். வராமல் இருந்த பணம் வசூலாகும். கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும். நண்பர்களின் உதவியுடன் தொழிலை விரிவு செய்வீர்கள். அதன்பின் உங்கள் எண்ணம் இழுபறியாகும். புதன், வியாழனில் வரவுகள் அதிகரிக்கும்.

புனர்பூசம் 1, 2, 3: முயற்சிக்கேற்ப லாபம் உண்டாகும் வாரம் இது. ஞாயிறு காலை பித்ரு வழிபாடு நன்மையாகும். குடும்ப நலனில் கவனம் செல்லும். சேமிப்பில் இருந்து சொத்து வாங்கும் முயற்சியை மேற்கொள்வீர்கள். வேலை இல்லாமல் இருந்தவர்களுக்கு புதிய வேலை அமையும். அந்நியர்கள் வழியே ஆதாயம் அதிகரிக்கும். துணிச்சலுடன் செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள்.

கடகம்


சூரியன், செவ்வாய், சுக்கிரன், புதன் நன்மைகளை வழங்குவர். சந்திர பகவான் அருளால் குழப்பம் தீரும்.

புனர்பூசம் 4: ஞாயிறு மதியம் வரை செயல்களில் நிதானமும் கவனமும் தேவை. பித்ரு வழிபாடு நன்மையாகும். அடுத்தவரை நம்பி எந்தவொரு பணிகளையும் ஒப்படைக்க வேண்டாம். அதன்பின் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். அரசு வழி முயற்சி ஆதாயமாகும். புதிய சொத்துகள் வாங்குவீர்கள். தொழிலில் வருமானம் அதிகரிக்கும் நிதி நிலை உயரும். புதன் வியாழனில் நிதானம் தேவை.

பூசம்: ஞாயிறு மதியம் வரை செலவுகள் அதிகரித்தாலும் உங்கள் எண்ணம் நிறைவேறும். பித்ரு வழிபாடு நன்மையாகும். புதிய முயற்சிகள் பலிதமாகும். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துங்கள். திங்கள் செவ்வாயில் நீண்ட நாள் எண்ணம் நிறைவேறும். புதன் வியாழனில் அரசு வழி முயற்சி ஆதாயமாகும்.

ஆயில்யம்: வாரத்தின் முதல் மூன்று நாட்களும் செலவுகளில் கவனம் தேவை. பண வரவு இழுபறியாகும். ஞாயிறு காலையில் பித்ரு வழிபாடு செய்வீர்கள். திங்கள் செவ்வாயில் செயல்களில் இருந்த தடைகள் விலகும். உங்கள் செல்வாக்கு உயரும். ஒரு சிலருக்கு புதிய வேலை அமையும். புதன், வியாழனில் எதிர்பார்த்த நன்மைகளை அடைவீர்கள் என்றாலும் அலைச்சல் அதிகரிக்கும்.

சிம்மம்


சுக்கிரன், கேது நன்மைகளை வழங்குவர். வராகி வழிபாடு வாழ்வை வளமாக்கும்.

latest tamil news

மகம்: ஞாயிறு மதியம் வரை உங்கள் விருப்பங்கள் நிறைவேறும். தைரியத்துடன் செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். பித்ரு வழிபாடு நன்மையாகும். அரசியல் வாதிகளுக்கு செல்வாக்கு கூடும். திங்கள் செவ்வாயில் குடும்ப நலனில் அக்கறை செலுத்துவீர்கள். புதன் வியாழனில் ஞானக் காரகன் அருளால் உங்கள் செயல்கள் வெற்றியாகும்.

பூரம்: ஞாயிறு மதியம் வரை உங்கள் செயல்களில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பித்ரு வழிபாட்டில் ஈடுபடுவீர்கள். திங்கள் செவ்வாயில் குடும்ப வழியில் செலவுகள் அதிகரிக்கும். ஒருசிலர் புதிய வாகனம் வாங்குவீர்கள். புதன் வியாழனில் ஒரு சில செயல்களை யோசிக்காமல் செய்து அதில் லாபம் அடைவீர்கள். உங்கள் செல்வாக்கு உயரும். திறமை வெளிப்படும்.

உத்திரம் 1: ஞாயிறு வரை உங்கள் செயல்கள் லாபமாகும். பித்ரு வழிபாட்டை மேற்கொள்வீர்கள். ஞானக் காரகனின் அருளால் நீண்ட நாட்களாக மனதை வாட்டிக் கொண்டிருந்த பிரச்னைகள் விலகும். புதன் வியாழனில் உங்கள் எண்ணங்கள் நிறைவேறும். அரசு பணியாளர்கள் மேலதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். திட்டமிட்ட செயல்கள் சாதகமாகும்.

கன்னி


சுக்கிரன் நன்மையை வழங்குவார். ஸ்ரீரங்கநாதரை வழிபட வாழ்க்கை வளமாகும்.

உத்திரம் 2, 3, 4: ஞாயிறு மதியம் வரையில் செயல்களில் சங்கடமும், அலைச்சலும் செலவுகளும் அதிகரிக்கும். பித்ரு வழிபாடு நன்மையாகும். திங்கள் செவ்வாயில் உங்கள் விருப்பங்கள் நிறைவேறும். எதிர்பார்த்த வரவுகளால் சங்கடங்கள் விலகும். புதன் வியாழனில் குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சிந்தித்து செயல்பட்டு உங்கள் முயற்சியில் வெற்றி காண்பீர்கள்.

அஸ்தம்: வாரத்தின் முற்பகுதி உங்களுக்கு சங்கடமாக இருக்கும். ஞாயிறு காலை பித்ரு வழிபாட்டில் ஈடுபடுவீர்கள். திங்கள் செவ்வாயில் உங்கள் முயற்சி பலிதமாகும். வருவாய் அதிகரிக்கும். புதிய பொருள் சேர்க்கை உண்டாகும். புதன் வியாழனில் குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.

சித்திரை 1, 2: ஞாயிறு மதியம் வரை செலவுகள் அதிகரிக்கும். பித்ரு வழிபாடு நன்மையாகும். அதன்பின் திருமண வயதினருக்கு வரன் வரும். புதிய சொத்து வாங்கும் முயற்சியை ஒரு சிலர் மேற்கொள்வீர்கள். வேலை வாய்ப்பை எதிர்பார்த்தவர்களுக்கு நல்ல தகவல் வந்து சேரும்.

துலாம்


சுக்கிரன், புதன் நன்மையை வழங்குவர். விநாயகரை வழிபட சங்கடம் விலகும்.

சித்திரை 3, 4: ஞாயிறு மதியம் வரை சந்திர பலத்தினால் உங்கள் எண்ணங்கள் நிறைவேறும். தொழில் சம்பந்தப்பட்ட முயற்சி ஆதாயமாகும். எதிர்பார்த்த வருவாய் வரும். பித்ரு வழிபாடு நன்மையாகும். திங்கள் செவ்வாயில் திடீர் செலவுகள் தோன்றும். புதன் வியாழனில் சிந்தித்து செயல்பட நன்மை உண்டாகும்.

சுவாதி: பெரும்பாலான கிரகங்கள் சாதகமற்ற நிலையில் சஞ்சரித்தாலும் வாரத்தின் முற்பகுதியில் உங்கள் எண்ணங்கள் நிறைவேறும். திட்டமிட்ட செயல்களை நிறைவேற்றி லாபம் காண்பீர்கள். ஞாயிறு காலை பித்ரு வழிபாடு மேற்கொள்வது நன்மையாகும். திங்கள் செவ்வாயில் செலவுகள் அதிகரிக்கும். புதன் வியாழனில் உங்கள் எண்ணம் நிறைவேறும்.

விசாகம் 1, 2, 3: வாரத்தின் முற்பகுதி உங்களுக்கு சாதகமாக இருக்கும். எதிர்பார்த்த வருவாய் வரும். நினைத்தவை நிறைவேறும். ஞாயிறு காலை பித்ரு வழிபாடு செய்வது நன்மையாகும். திங்கள் செவ்வாயில் எச்சரிக்கையுடன் செயல்படுங்கள். புதன் வியாழனில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

விருச்சிகம்

சூரியன், ராகு, புதன் நன்மையை வழங்குவர். திருச்செந்துார் முருகனை வழிபட சங்கடம் தீரும்.

விசாகம் 4: எதிர்பார்ப்புகள் நிறைவேறும் வாரம் இது. வெள்ளி முதல் செவ்வாய் வரை நினைத்தவற்றை சாதித்து முடிப்பீர்கள். ஞாயிற்றுக்கிழமை பித்ரு வழிபாடு நன்மையாகும். உங்கள் செல்வாக்கு உயரும். நிதிநிலை சீராகும். புதிய முயற்சிகள் பலிதமாகும். புதன் வியாழனில் திடீர் செலவுகளும் அலைச்சலும் அதிகரிக்கும்.

அனுஷம்: யோகமான வாரம் இது. செவ்வாய் வரை நன்மைகள் அதிகரிக்கும். முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். உறவினர்களின் ஆதரவு அதிகரிக்கும். தொழிலை விருத்தி செய்து லாபம் காண்பீர்கள். ஞாயிறு காலை பித்ரு வழிபாடு நன்மையாகும். புதன் வியாழனில் நெருக்கடிகள் உண்டாகும்.

கேட்டை: சங்கடங்கள் விலகும். உங்கள் முயற்சியில் ஆதாய நிலை உண்டாகும். வருமானம் பல வழிகளிலும் வர ஆரம்பிக்கும். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். ஞாயிறு காலை பித்ரு வழிபாடு மேற்கொள்வீர்கள். புதன் வியாழனில் செலவுகளில் கவனம் தேவை.

தனுசு

செவ்வாய், சுக்கிரன், சூரியன், கேது நன்மை வழங்குவர். துர்கையை வழிபட சங்கடம் விலகும்.

மூலம்: பெரும்பாலான கிரகங்கள் சாதகமாக இருப்பதால் செயல்கள் எளிதாக நடந்தேறும். எதிர்பார்ப்பு நிறைவேறும். பத்தாமிட சூரியனால் முயற்சிகள் லாபமாகும். எதிர்பார்த்த நன்மை அடைவீர்கள். ஞாயிறு காலை பித்ரு வழிபாடு நன்மையாகும்.

பூராடம்: கடந்த வாரத்தில் ஏற்பட்ட சங்கடம் விலகும். துணிச்சலுடன் செயல்பட்டு விரும்பியதை அடைவீர்கள். புதிய முயற்சியில் ஈடுபடுவீர்கள். வருமானத்தில் இருந்த தடை விலகும். பணம் பலவழிகளிலும் வர ஆரம்பிக்கும். செல்வாக்கு உயரும். ஞாயிற்றுக்கிழமை பித்ரு வழிபாடு நன்மையாகும்.

உத்திராடம் 1: நெருக்கடி நிலை விலகி நன்மை காண்பீர்கள். எதிர்பார்ப்பு நிறைவேறும். வேலைவாய்ப்பிற்காக மேற்கொண்ட முயற்சி நிறைவேறும். குடும்ப பிரச்னைகள் தீரும். ஞாயிறன்று பித்ரு வழிபாடு மேற்கொள்வது நல்லது.

மகரம்

சுக்கிரன், புதன் நன்மை வழங்குவர். அனுமனை மனதில் நினைத்து செயல்படுங்கள்.

உத்திராடம் 2, 3, 4: ஞாயிறு மதியம் வரை சந்திராஷ்டமம் இருப்பதால் செயல்களில் பின்னடைவை சந்திக்கலாம். குழப்பம் அதிகரிக்கும். அதன்பின் உங்கள் முயற்சிக்கேற்ப நன்மை ஏற்படும். முயற்சிகள் வெற்றியாகும். புதன், வியாழனில் தொழிலில் தடைகள் விலகும். ஞாயிறு காலை பித்ரு வழிபாடு நன்மையாகும்.

திருவோணம்: வாரத்தின் முற்பகுதியில் சங்கடம் உண்டாகும். அரசு வழியில் சிக்கல் ஏற்படலாம். ஞாயிறு மதியம் முதல் முயற்சிகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். தொழிலில் தடைகள் விலகும். வருமானம் அதிகரிக்கும். ஞாயிறு காலையில் பித்ரு வழிபாடு நலம் தரும்.

அவிட்டம் 1, 2: வாரத்தின் தொடக்கத்தில் பழைய பிரச்னைகள் தலைதுாக்கும். நெருக்கடி அதிகரிக்கும். முயற்சி தள்ளிப்போகும். ஞாயிறு மதியம் முதல் நிலைமை சீராகும். வருமானம் வரத் தொடங்கும். ஞாயிறு காலை பித்ரு வழிபாடு அவசியம்.

சந்திராஷ்டமம்

22.9.2022 நள்ளிரவு 3:27 மணி – 25.9.2022 மதியம் 12:56 மணி

கும்பம்


ராகு, நன்மைகளை வழங்குவார். சக்தி வழிபாடு சங்கடம் தீர்க்கும்.

அவிட்டம் 3, 4: ஞாயிறு மதியம் வரை முயற்சி வெற்றி பெறும். செயல்களில் லாபம் காண்பீர்கள். சொத்து வாங்கும் எண்ணம் நிறைவேறும். பொன் பொருள் சேரும். அதன்பின் நிதானம் அவசியம். புதன், வியாழனில் லாபம் உண்டு. ஞாயிறு காலை பித்ரு வழிபாடு நன்மையாகும்.

சதயம்: ஞாயிறு மதியம் வரையில் எண்ணங்கள் நிறைவேறும். புதிய முயற்சிகள் லாபம் தரும். தைரியத்துடன் செயல்பட்டு தேவைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள் அதன்பின் நெருக்கடி தோன்றும். புதன், வியாழனில் வரவுகள் உண்டு. ஞாயிறு காலை பித்ரு வழிபாடு நன்மையாகும்.

பூரட்டாதி 1, 2, 3: நீண்ட நாள் எதிர்பார்ப்பு நிறைவேறும் ஞாயிறு மதியம் வரையில் மேற்கொள்ளும் முயற்சி ஆதாயம் தரும். அதன்பின் செயல்களில் தடுமாற்றம் ஏற்படும். புதன், வியாழனில் நிலைமை சீராகும். ஞாயிறு காலை பித்ருகளை வழிபடுங்கள்.

சந்திராஷ்டமம்

25.9.2022 மதியம் 12:57 மணி – 27.9.2022 இரவு 8:00 மணி

மீனம்


செவ்வாய், புதன் நன்மை வழங்குவர். மகாலட்சுமியை வழிபடுங்கள்.

பூரட்டாதி 4: வாரத்தின் முற்பகுதியில் எண்ணம் பலிதமாகும். முயற்சி வெற்றியாகும். மனதில் இருந்த குழப்பம் விலகி தெளிவுடன் செயல்படுவீர்கள். செவ்வாய் இரவு முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் சில சங்கடங்களை சந்திப்பீர்கள். ஞாயிறு காலை பித்ரு வழிபாடு நன்மையாகும்.

உத்திரட்டாதி: மனதில் தெளிவு உண்டாகும். நீண்டநாள் எண்ணம் நிறைவேறும். சிலருக்கு இடம், ஊர் மாற்றம் உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த வருவாய் வரும். கூட்டுத் தொழிலில் இருந்த பிரச்னை விலகும். செவ்வாய் இரவு முதல் மனதில் சங்கடம் தோன்றும். ஞாயிறு காலை பித்ரு வழிபாடு நன்மையாகும்.

ரேவதி: நன்மைகள் நடந்தேறும் வாரம் இது. எதிர்பார்த்த செயல்கள் ஆதாயமாகும். பூர்வீக சொத்துகள் விவகாரம் முடிவிற்கு வரும். அஷ்டம கேது ஆரோக்கியத்தில் பாதிப்பை ஏற்படுத்துவார் என்பதால் உடல் நலனில் அக்கறை செலுத்துங்கள். செவ்வாய் இரவு முதல் செயல்களில் சங்கடங்கள் உண்டாகும். ஞாயிறு காலை பித்ரு வழிபாடு நன்மையாகும்.

சந்திராஷ்டமம்

27.9.2022 இரவு 8:01 மணி – 29.9.2022 நள்ளிரவு 12:47 மணி


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *