Loading

அண்ணாநகர்: சென்னை அரும்பாக்கம் அப்துல் ரசாக் கார்டன் சாலையில் தனியார் நகை கடன் வங்கி செயல்படுகிறது. இங்கு பணிபுரிந்த முன்னாள் ஊழியர் ஒருவர், தனது  கூட்டாளிகளுடன் சேர்ந்து கடந்த மாதம் 13ம் தேதி வங்கிக்குள் புகுந்து ஊழியர்களை கட்டிப்போட்டு 31.7 கிலோ தங்கத்தை கொள்ளையடித்து சென்றார். இதுதொடர்பாக, அரும்பாக்கம் போலீசார் தனிப்படை அமைத்து, முக்கிய குற்றவாளியான முருகன் (29), சந்தோஷ் (30), பாலாஜி (28), செந்தில்குமரன் (38), ஸ்ரீவத்சன், சூரியபிரகாஷ் (29), கேப்ரியல் (29) மற்றும் கொள்ளையர்களுக்கு உடந்தையாக இருந்த அச்சிறுப்பாக்கம் காவல் ஆய்வாளர் அமல்ராஜ் உள்பட 8 பேரை கைது செய்தனர்.  

இதில்  முருகன், சூர்யா, ஸ்ரீவத்சன், செந்தில்குமார், பாலாஜி, சந்தோஷ் ஆகிய 6 பேரை  குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய அண்ணாநகர் துணை ஆணையர் விஜயகுமார், சென்னை மாநகர கமிஷனர் சங்கர் ஜிவாலுக்கு பரிந்துரை செய்தார். இதன் அடிப்படையில், அரும்பாக்கம் போலீசார், அவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து, மீண்டும் அதே   சிறையில் அடைத்தனர்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *