துலாம் கிரகநிலை – ராசியில் கேது – சுக ஸ்தானத்தில் சனி(வ) – ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு(வ) – சப்தம ஸ்தானத்தில் ராகு – அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் செவ்வாய் – லாப ஸ்தானத்தில் புதன், சுக்கிரன் – விரைய ஸ்தானத்தில் சூர்யன் என கிரகநிலை அமைந்திருக்கிறது.

இந்தமாதம் 25-ம் தேதி சுக்கிரன் பகவான் விரைய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்: ராசிநாதன் சுக்கிரன் அயன சயன போக விரைய ஸ்தானத்திற்கு மாறுகிறார். ஆறாமிடத்தைப் பார்ப்பதால் எதிர்ப்புகள் விலகும். பணவரத்து அதிகரிக்கும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். ஆடை ஆபரண சேர்க்கை இருக்கும். காரிய தடை, வீண் அலைச்சல் அகலும். எதிர்பாலினத்தாரிடம் கவனமாக பழகுவது அவசியம்.

தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். பழைய பாக்கிகள் வசூலாவது மனதிருப்தியை தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் பணிசுமையால் டென்ஷனுடன் காணப்படுவார்கள். நிலுவையில் உள்ள தொகைகள் வந்து சேரலாம். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். சின்ன சின்ன கருத்து வேற்றுமைகள் வரும். பிள்ளைகளின் செயல்பாடுகள் ஆறுதலைத் தரும்.

வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். பெண்களுக்கு அடுத்தவர்களின் செயல்களால் கோபம் உண்டாகலாம். கலைத்துறையினருக்கு பாக்கிகள் வசூலாகும். அரசியல்துறையினர் கொடுத்த கடனை திரும்ப பெறுவதில் முழுமூச்சுடன் செயல்படுவீர்கள். மாணவர்களுக்கு கவனத்தை சிதற விடாமல் வகுப்பை கவனிப்பது அவசியம். கூடுதலாக பாடங்களை படிக்க வேண்டி இருக்கும்.

சித்திரை 3, 4 பாதங்கள்: தடைபட்ட காரியங்களில் தடை நீங்கி சாதகமாக நடந்து முடியும்.

ஸ்வாதி: எல்லா தடைகளும் விலகும். காரிய வெற்றி உண்டாகும்.

விசாகம் – 1, 2, 3 பாதங்கள்: நினைத்த காரியங்கள் நடந்தேறும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

பரிகாரம்: நரசிம்மருக்கு பானகம் நிவேதனம் செய்து வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும்.

***********

விருச்சிகம் கிரகநிலை – தைரிய வீர்ய ஸ்தானத்தில் சனி(வ) – பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் குரு(வ) – ரண ருண ரோக ஸ்தானத்தில் ராகு – சப்தம ஸ்தானத்தில் செவ்வாய் – தொழில் கர்ம ஜீவன ஸ்தானத்தில் புதன், சுக்கிரன் – லாப ஸ்தானத்தில் சூர்யன் – விரைய ஸ்தானத்தில் கேது என கிரகநிலை அமைந்திருக்கிறது.

இந்தமாதம் 25-ம் தேதி சுக்கிரன் பகவான் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்: ராசியும் ஐந்தாமிடமும் பலமாக இருப்பதால் மனகலக்கம் நீங்கும். எவ்வளவு திறமையாக செயல்பட்டாலும் மற்றவர்களின் விமர்சனத்திற்கு ஆளாக வேண்டி வரும். எதிர்த்து செயல்பட்டவர்கள் அடங்கி விடுவார்கள். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். எதிர்பாலினத்தாரின் நட்பும், அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும். விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நேரிடலாம். வீண் செலவு உடல் நல பாதிப்பு ஏற்படலாம்.

தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் காண கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். தொழில் விரிவாக்கம் பற்றிய எண்ணம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய பதவி அல்லது கூடுதல் பொறுப்புகள் கிடைக்க பெறுவார்கள். குடும்பத்தில் இருப்பவர்களின் நலனுக்காக செலவு செய்ய வேண்டி இருக்கும். அன்பு அதிகரிக்கும்.

பிள்ளைகளின் தேவையை பூர்த்தி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். பெண்களுக்கு மனதில் வீண்குழப்பம் உண்டாகும். கலைத்துறையினர் ஓய்வில்லாமல் உழைக்க வேண்டி இருக்கும். அரசியல்வாதிகளுக்கு ஆலோசனை கேட்டு சிலர் வரக்கூடும். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற எடுக்கும் முயற்சிகள் நல்ல பலன் தரும். சக மாணவர்களின் நட்பும் கிடைக்கும்.

விசாகம் – 4ம் பாதம்: உங்கள் செயல்பாடுகள் மற்றவர்களைக் கவரும். வாக்குவாதங்கள் நீங்கும்.

அனுஷம்: தேவையான உதவிகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் உண்டாகும்.

கேட்டை: காரியங்கள் கைகூடும். மன கஷ்டம் நீங்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

பரிகாரம்: முருகனுக்கு பாலபிஷேகம் செய்து அர்ச்சனை செய்து வணங்க மன அமைதி உண்டாகும். காரிய அனுகூலம் ஏற்படும்.

***********

தனுசு கிரகநிலை – தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி(வ) – சுக ஸ்தானத்தில் குரு(வ) – பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ராகு – ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய் – பாக்கிய ஸ்தானத்தில் புதன், சுக்கிரன் – தொழில் ஸ்தானத்தில் சூர்யன் – லாப ஸ்தானத்தில் கேது என கிரகநிலை அமைந்திருக்கிறது.

இந்தமாதம் 25-ம் தேதி சுக்கிரன் பகவான் தொழில் கர்ம ஜீவன ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்: தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருக்கும் சனி பகவானால் எதிர்பார்த்த படி காரியங்கள் நடந்து முடியாமல் காரிய தாமதம் உண்டாகலாம். உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். வீண் வாக்குவாதத்தால் பகை உண்டாகலாம். பயணத்தில் தடங்கல், வீண் செலவு போன்றவை ஏற்படும். பணவரத்து இருக்கும். நன்மைகள் உண்டாகும். பெரியோர்களின் உதவி கிடைக்கும்.

மனதில் தைரியம் உண்டாகும். தொழில் வியாபாரம் நன்றாக நடக்கும். வாக்குவன்மையால் லாபம் அதிகரிக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய பதவிகள் கூடுதல் பொறுப்பு கிடைக்க பெறுவார்கள். அலுவலக பணிகளை வெற்றிகரமாக செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். நீண்ட நாட்களாக இருந்த குடும்பம் தொடர்பான பிரச்சினைகள் சாதகமாக முடியும்.

குழந்தைகள் கல்விக்காக பாடுபட வேண்டி இருக்கும். பெண்களுக்கு பயணங்களால் செலவு ஏற்படும். கலைத்துறையினருக்கு துணிச்சலுடன் எதிலும் ஈடுபட்டு காரிய வெற்றி காண்பீர்கள். அரசியல்வாதிகளுக்கு அரசாங்கம் தொடர்பான காரியங்கள் சாதகமான பலன்தரும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். விளையாட்டில் கவனம் செலுத்துவீர்கள்.

மூலம்: நீங்கள் செய்யும் காரியங்களுக்கு இருந்த தடை நீங்கும். எதிர்ப்புகள் விலகும். பணவரத்து கூடும்.

பூராடம்: பிறமொழி பேசுபவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். அலைச்சல் இருக்கும்.

உத்திராடம் – 1ம் பாதம்: உதவிகள் செய்யும்போது ஆலோசித்து செய்வது நல்லது. எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது.

பரிகாரம்: சிவனுக்கு வில்வத்தால் அர்ச்சனை செய்து வணங்க காரிய தடைகள் நீங்கும். நிலுவையில் உள்ள பணம் கைக்கு கிடைக்கும்.

அனைத்து ராசிகளுக்கான வார பலன்கள் @ செப்.22- 28 வரை

> மேஷம், ரிஷபம், மிதுனம்

> கடகம், சிம்மம், கன்னி

> துலாம், விருச்சிகம், தனுசு

> மகரம், கும்பம், மீனம்


ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை ‘இந்து தமிழ் திசை’யின் கருத்துகள் அல்ல.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *