<p>பாக்கியலட்சுமி சீரியலில் எழிலால்&nbsp; அம்ரிதா குடும்பத்தில் பிரச்சனை வெடிக்கும் காட்சிகள் இன்று ஒளிபரப்பாகிறது.&nbsp;</p>
<h3>ரசிகர்களை கவரும் பாக்கியலட்சுமி&nbsp;</h3>
<p><a title="விஜய்" href="https://tamil.abplive.com/topic/vijay" data-type="interlinkingkeywords">விஜய்</a>&nbsp;டிவி சீரியலில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களின் ஆல்டைம் ஃபேவரைட்டாக உள்ளது. இந்த சீரியலின் ஹீரோ கோபி குடும்பத்திற்காக மனைவி பாக்யாவை பிடிக்காமல் அவரோடு சகித்து கொண்டு வாழ்த்து வருகிறார். அந்த சமயத்தில் தன்னை சந்திக்கும் முன்னாள் காதலி ராதிகா மீது அவருக்கு மீண்டும் காதல் துளிர்கிறது. இதற்காக கோபி செய்யும் ஒவ்வொரு தகிடு தத்தங்கள் என்னென்ன என்பதான திரைக்கதை சுவாரஸ்யமாக சென்ற நிலையில் கடந்த சில எபிசோட்கள் அடுத்தடுத்து எதிர்பாராத திருப்பங்களை ஏற்படுத்தியது.</p>
<p>இந்த சீரியலில் கோபியாக நடிகர் சதீஷ்குமார், பாக்யலட்சுமியாக நடிகை சுசித்ரா ஷெட்டி, ராதிகாவாக நடிகை ரேஷ்மா ஆகியோர் நடிக்கின்றனர். பாக்யாவுக்கு கோபிக்கும் ராதிகாவுக்கும் இடையேயான உறவு குறித்து தெரிந்தது முதலே இத்தொடர் மிகுந்த எதிர்பார்ப்புடன் செல்கிறது.கடந்த வாரங்களில் கோபிக்கு பாக்யா விவாகரத்து கொடுத்தது, கோபி வீட்டை விட்டு வெளியேறியது, . ராதிகா கோபியை திருமணம் செய்ய சம்மதித்த காட்சிகள் இடம் பெற்றது. &nbsp;இனி இன்றைய எபிசோடில் என்ன நடக்கிறது என பார்க்கலாம்.&nbsp;</p>
<h3>இனியாவை திட்டிய ஈஸ்வரி</h3>
<p>கோபியுடன் ராதிகா வீட்டுக்கு சென்றதை கேட்டு ஈஸ்வரி டென்ஷனாகிறார். தொடர்ந்து நீ எதுக்கு அவங்க வீட்டுக்கு போன என கேட்கிறார். நான் தெரியாமல் தான் போனேன். ஆனால் எனக்கு பிடிக்கல என இனியா சொல்கிறார். உடனே ஈஸ்வரி எல்லாதுக்கும் உன்னை சொல்லணும் என பாக்யாவிடம் சீறுகிறார். இதனால் கடுப்பாகும் அவரோ, கோபி இந்த வீட்டை விட்டு போனதுக்கு நான் காரணம் சொல்றதை கூட நான் ஏத்துக்குறேன். அதேசமயம் கண்ட கண்ட இடத்துக்கெல்லாம் போறதுக்கு நான் எப்படி பொறுப்பாக முடியும் என கேள்வியெழுப்புகிறார்.&nbsp;</p>
<p>மேலும் சட்டப்படி எங்களுக்கு சம்பந்தம் இல்லை என சொல்ல அதைக் கேட்டு ஆத்திரமடையும் செழியன், எங்களுக்கும் அப்பாவுக்கும் சம்பந்தம் இருக்கா என கேட்கிறார்.அவரை மூர்த்தி திட்டி அமைதிப்படுத்துகிறார். பின்னர் ரூமில் இனியா பாக்யாவை பார்த்து மனது மாறுகிறார். பின்னர் அவரிடம் அப்பாவுடன் வெளியே போனது உனக்கு கோபம் இல்லையே என கேட்கிறார். பாக்யா இனியாவிடம் அப்படி எல்லாம் இல்லை என சொல்கிறார்.&nbsp;</p>
<p>தொடர்ந்து மூர்த்தியிடம் பேசும் ஈஸ்வரி, கோபி ஏன் இப்படி பண்றான்னு தெரியல என சொல்லி ஆதங்கப்படுகிறார். மூர்த்தி நாளைக்கு இதில் ஒரு முடிவு எடுக்கிறேன் என சொல்லி அவரை தேற்றுகிறார்.&nbsp;</p>
<h3>எழிலிடம் காதல் வசனம் பேசும் வர்ஷினி&nbsp;</h3>
<p>எழிலை பிடித்துப் போனதால் அவருடன் பைக்கில் செல்ல ஆசைப்பட்டு தயாரிப்பாளரின் மகள் வர்ஷினி வீட்டுக்கு செல்கிறார். போகும் வகையில் எழிலிடம் அம்ரிதா குறித்த காதல் கதையை கேட்கிறார். தனக்கும் எழிலை பிடித்துள்ளதை நினைத்துக் கொள்கிறார். அவரும் சொல்லிக்கொண்டிருக்கையில் இருவரும் பைக்கில் செல்வதை பார்த்த அம்ரிதா அப்பா வீட்டில் சென்று எழில் மீது குற்றம் சாட்டுகிறார். ஆனால் அவர் சினிமாவில் இருப்பதால் சென்றிருப்பார் என அம்ரிதா சப்போர்ட் செய்வதோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.&nbsp;</p>
<p>&nbsp;</p>

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *