இப்போது அதிமுக-வை கட்டி ஆளும் எடப்பாடி பழனிசாமி, வேலுமணி, தங்கமணி, செங்கோட்டையன், செந்தில் பாலாஜி (முன்னாள் அதிமுக அமைச்சர்) உட்பட பல அமைச்சர்களை உருவாக்கியது ராவணன்தான். அதிமுக-வில் ஒருவரின் எழுச்சி, வீழ்ச்சி இரண்டும் ராவணனின் கையில்தான் என்றளவுக்கு கோலோச்சி கொண்டிருந்தார்.
கோவை சிங்காநல்லூர் பகுதியில்தான் ராவணன் வீடு இருந்தது. இருப்பினும் கொங்கு மண்டலம் முழுவதும் ஆயில் மில் தொடங்கி ஏராளமான தொழில்களில் ஈடுபட்டு வந்தார்.