Loading

லக்னோ: உத்திரபிரதேசத்தில் கனமழை காரணமாக சுவர் இடிந்து விழுந்து 4 சிறுவர்கள் பலியாகிய நிலையில் 2 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உத்திரபிரதேசத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்துவரும் காரணமாக பல்வேறு இடங்களில் பல்வேறு விபத்துகள் நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் உத்திரபிரதேச மாநிலம் எடாவா மாவட்டத்தில் பெய்துவரும் தொடர் கனமழை காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 4 சிறுவர்கள் உயிரிழந்தனர்.

வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கிய குழந்தை மற்றும் அந்த குழந்தையின் பாட்டி ஆகியோர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்த இருவரையும் எடாவா மாவட்ட மருத்துவமனையில்  சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று அதிகாலை 3 மணியளவில் கனமழை காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்து சிகு (10), அபி (8), சோனு (7), ஆர்த்தி (5) ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் உத்திரபிரதேசத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் காரணமாக மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *