ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் தோற்றதோடு மட்டுமல்ல கடந்த சில போட்டிகளில் ரோஹித் சர்மா படை தோல்விகளைச் சந்தித்து வருகின்றன, இதையடுத்து அணியில் பெரிய மாற்றங்கள் தேவை என்று 2007 டி20 உலகக்கோப்பை வென்ற அணியில் ஆடிய இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஆர்.பி.சிங் தெரிவித்துள்ளார். 

“உமேஷ் யாதவ் வீசிய ஒரு ஓவரில் 2 விக்கெட்டுகள் விழுந்த அந்த ஒவரைத் தவிர மற்ற ஓவர்கள் எதிலும் இந்திய பவுலர்கள் தாக்கம் ஏற்படுத்தவே இல்லை. இது திறமையின்மை அல்ல, திட்டத்தை சரிவர செயல்படுத்த முடியாமையால் இருக்கலாம்.

மேலும் வைடு யார்க்கர்களை பவுலர்கள் வீசும்போது பாயிண்ட், தேர்ட்மேன் இரண்டுமே 30 அடி வட்டத்துக்குள் இருப்பது சரியாக இருக்காது. பெரிய அளவில் மாற்றங்கள் தேவை அப்படி இல்லை எனில் 150 ரன்களை தடுத்தாக வேண்டிய கட்டாயமான ஆட்டத்தில் இந்திய அணி எங்குமே இருக்காது, வெற்றி பெறவே முடியாது.

ஆஸ்திரேலியா நேற்று 208 ரன்கள் இலக்கை விரட்டும் போது ஓரு கட்டத்தில் கூட இந்திய அணியினர் ஆதிக்கம் செலுத்தவில்லை. ஆஸ்திரேலிய பேட்டர்கள் ரெகுலராக பவுண்டரிகள் அடித்ததோடு சிங்கிள்களையும் இஷ்டத்துக்கு எடுத்தனர்.

கேமரூன் கிரீன், மேட் வேட் அருமையாக ஆடினர், மற்ற பேட்டர்களின் பங்களிப்பும் சேர்ந்தது.” என்று கூறியுள்ளார் ஆர்.பி.சிங்.  இந்திய அணி நேற்று 3 கேட்ச்களை விட்டதோடு, பீல்டிங்கில் பந்துகளை அடிக்கடி கோட்டை விட்டனர். பந்து வீச்சு சொதப்பலோ சொதப்பலாக அமைந்தது.

Published by:Sankaravadivoo G

First published:

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *