அமராவதி: ஆந்திர மாநிலம் சித்தூரில் பேப்பர் பிளேட் தயாரிப்பு நிறுவனத்தின் மேல் மாடி வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் தந்தை மகன் உட்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பாஸ்கர் என்பவருக்கு சொந்தமான காகித தட்டுகள் தயாரிக்கும் தொழிற்சாலையில் நள்ளிரவில் 2 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் மாடியிலேயே தங்கியிருந்த பாஸ்கர், அவருடைய மகன் தில்லி பாபு, நண்பர் பாலாஜி ஆகியோர்கள் தீயில் சிக்கி உயிரிழந்தனர். தீயணைப்பு வாகனங்கள் வருவதற்கு காலதாமதம் ஆனதால் பொதுமக்கள் வீட்டின் சுவர்களை உடைத்து உள்ளே மயங்கி கிடந்தவர்களை மீது சித்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்துள்ளது.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: