தமிழ்நாடு சிறப்பு காவல் படை காவலர் கார்த்திக்கின் மனைவி நித்யா கடந்த 17ம்தேதி திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமாரை, திருநங்கையால் பாதிக்கப்பட்ட சிலருடன் சென்று சந்தித்து புகார் மனு அளித்துள்ளார். பின்னர் அவர்கள்  மணப்பாறை டிஎஸ்பி அலுவலகத்திற்கு விசாரணைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். மணப்பாறை டிஎஸ்பி ராமநாதன் அவர்களிடம் விசாரணை நடத்தினார். திருநங்கை பபிதா ரோஸை விசாரணைக்கு அழைத்தபோது இரவு ஆகிவிட்டதால்  மறுநாள் விசாரணைக்கு வருவதாக தெரிவித்துள்ளார்.

ஆனால் திருநங்கை விசாரணைக்கு வராமல் நேற்று உளுந்தூர்பேட்டையில் புகார் அளித்துள்ளார். திருநங்கை தான் ஒரு சிங்கம்பட்டி ஐமீன் வாரிசு என்றும் சப் கலெக்டராக பணிபுரிகிறேன் என்றும், திரைப்படத்துறையில் இருப்பதாகவும் கூறி பலரையும் ஏமாற்றியுள்ளார். இவர் மீது கார்த்திக் மனைவி நித்யா கொடுத்த புகார் மனுவில், கார்த்திகை மிரட்டுவது, சிங்கம்பட்டி ஜமீன் வாரிசு எனகூறும் தொலைபேசி உரையாடல்கள் மற்றும் திருநங்கை பலருடனும் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் உள்ளன.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *