ரயில் நிலையங்களில் வாகன காப்பகங்கள் பராமரிப்பு, விளம்பரங்கள் செய்வது, கழிப்பறை பராமரிப்பு, தானியங்கி பணம் வழங்கும் இயந்திரம் அமைப்பது, ரயில்களில் பார்சல் போக்குவரத்து போன்ற சேவைகளுக்கு ரயில்வே வர்த்தக பிரிவு ஒப்பந்ததாரர்களை நியமித்து வருகிறது. நேர்மையான வெளிப்படை தன்மையுடன் ஒப்பந்தங்களை கையாள தற்போது ரயில்வேயில் மின்னணு ஏலம் நடைமுறைக்கு வந்துள்ளது.
மதுரை ரயில்வே கோட்டத்திற்கு மின்னணு ஏல முறை மூலம் ரூபாய் 13.40 கோடி வருமானம் கிடைத்துள்ளது.@drmmadurai | @city_madurai | @UpdatesMadurai | @AviationMadurai
— arunchinna (@arunreporter92) September 20, 2022
இதன் மூலம் மதுரை ரயில்வே கோட்டத்திற்கு ரூபாய் 13.40 கோடி வருவாய் கிடைத்துள்ளது. மொத்தமாக தெற்கு ரயில்வே அளவில் இந்த மின்னணு ஏல முறையில் 151 ஒப்பந்ததாரர்கள் தேர்வு செய்யப்பட்டு ரூபாய் 82.80 கோடி வருமானம் கிடைத்துள்ளது. மின்னணு ஏல முறையில் எளிதான, விரைவான சேவை கிடைக்கிறது. முன்வைப்புத் தொகை செலுத்துவது, ஒப்பந்த ஆணை வழங்குவது போன்றவை விரைவாக இணையதளம் மூலமாக நடைபெறுகிறது.