சென்னை;
சென்னை சுங்குவார்சத்திரத்தில் உள்ள ஃபாக்ஸ்கான் ஆலையின் நிர்வாகிகளை கூண்டோடு மாற்றம் செய்யப்படவுள்ளனர். அண்மையில் ஃபாக்ஸ்கான் ஊழியர்கள் தங்கிருந்த இடத்தில் உணவு தரமில்லாததால் ஆயிரக்கணக்கான பெண் ஊழியர்கள்
போராட்டம் செய்தனர். இதனால், ஊழியர்கள் தங்கியிருந்த இடத்தை ஆப்பிள் நிறுவன உயர் அதிகாரிகள் ஆய்வு செய்ததில், வசதிகள் இல்லை என்பது அம்பலமானதால் நிர்வாகிகள் மாற்றப்படவுள்ளனர்.